திருக்கோவில் விநாயகபுரத்தில் 15 வயது மாணவன் காணாமல் போயுள்ளார்



அம்பாறை, திருக்கோவில், வினாயகபுரத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த 2ம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயத்தில் பயிலும் வினாயகபுரம் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 2ம் திகதி மாரை 3.30 மணிக்கு பாடசாலையை துப்பரவு செய்ய என வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பாததையடுத்து 4ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணமல் போன மாணவன் தொடர்பான தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்துமாறு பொலிசார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Tags: , , ,

About author

For news updates connect our facebook www.facebook.com/thirukkovil.